Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநில அளவிலான மரத்தான் போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு எம்பி பரிசுகளை வழங்கினார் 

ஜுலை 03, 2023 05:19

ராசிபுரம்: சிம்பா ஸ்போர்ட்ஸ் அகடாமி, வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள், இராசிபுரம் ஒன்றியம், பிள்ளாநல்லூர் பேரூர்  திமுக ஆகியவை இணைந்து மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடத்தியது. 

இதில் மாநில அளவில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான கே.பி.ஜெகநாதன் தலைமை தாங்கினார்.

பின்னர் பிள்ளாநல்லூர் பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான அ.சுப்ரமணியம், மாவட்ட கழக பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை, மற்றும் கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் நாகேந்திரன், சத்தியநாதன், மனோகரன், கனகம், பூபதி, மாவட்ட பிரதிநிதி கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், வார்டு கவுன்சிலர் சீனிவாசன், சிவக்குமார், 
வேலுபிரபாகரன், கோபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்