Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழப்பாவூரில் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஜுலை 03, 2023 08:19

பாவூர்சத்திரம்: தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூரில் பேரூர் திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா பெரியார் திடலில் நடைபெற்றது. 

பேரூர் செயலாளர் ரெ.ஜெகதீசன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கா.ராஜாமணி முன்னிலை வகித்தனர்.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞரின் 100வது பிறந்த தினத்தை குறிப்பிடும் வகையில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கி பேசினார். 

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன்,பேரூர் துணை செயலாளர்கள் அறிவழகன், முருகன், பேரூர் பொருளாளர் தெய்வேந்திரன், நிர்வாகிகள் சிவன், கணேசன், சுந்தர்ராஜ், பேச்சாளர் தமிழ்செல்வன், வார்டு செயலாளர் மாரியப்பன், கவுன்சிலர் இசக்கிமுத்து, ஆதிதிராவிடர் அணி பாலசுப்பிரமணியன், பாலமுருகன், அன்பழகன், முப்புடாதி, மாரிகண்ணன், இளைஞரணி சுடர் பாண்டியன், சிவகணேசன், அசோக், மகாராஜன், பூங்குன்றன், மாயாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்