![](admin/uploads/.629117802163a7.14098112.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை பொறுப்பு உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்திப்பின் மாவட்ட பொறுப்பாளரும், மாவட்ட துணைத் தலைவர் என்.ஏஸ்.ஹரிஹரன் தலைமை தாங்கினார்.
மேலும் லும் எருமப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் துரை ராஜ், மாநிலச் செயலாளர் உள்ளாட்சி பிரிவு வரவேற்புரை ஆற்றினர், பொதுச் செயலாளர் வி.சேதுராமன், மாவட்ட பொருளாளர் செந்தில்நாதன், மாவட்ட துணைத் தலைவர் ஹேமா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் என்.பி.சத்தியமூர்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கே.மனோகரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனையை உள்ளாட்சி பிரதிகளுக்கு எடுத்துரைத்தனர்.
பாரத பிரதமரின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடத்தில் உள்ளாட்சி பிரதிகளும், உள்ளாட்சியில் போட்டியிட்டவர்களும் மக்களிடத்திலே எடுத்துரைத்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் கரங்களுக்கு வலு
சேர்க்குமாறு கேட்டுக் கொண்டனர். '
கூட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் ராசிபுரம் ஒன்றியம் வடிவேல், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம் பிரகாஷ், எருமப்பட்டி ஒன்றியம் செந்தில் பாரதி, மோகனூர் ஒன்றியம் செல்வமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்கள் செல்வம், பிரகாஷ், வெண்ணந்தூர் ஒன்றிய பொதுச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மீடியா பிரிவு தலைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.