Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவுடையானூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஜுலை 04, 2023 06:41

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர், பொடியனூர் சிவசக்தி வித்யாலயா சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.சி. பள்ளி சார்பில் உலக பிளாஸ்டிக் தவிர்ப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

ஆவுடையானூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொடங்கிய இப்பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்கராஜன் (எ) கோபி தொடங்கி வைத்தார். 
இதில் மாணவியர் ஜெய்ஸ்ரீ, கமலிஸ்ரீ ஆகியோர் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து பேசினர். மாணவி செல்வமாரி வரவேற்றார். 

பேரணி மாடியனூர் வழியாக சென்று பள்ளியை சென்றடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் நெகிழி ஒழிப்பு தொடர்பான கோஷங்களை எழுப்பியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் சென்றனர்.

மேலும் ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்