![](admin/uploads/.5e465cd092b250.19262266.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: கடையம் அருகே காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகையை மாவட்ட திமுக சார்பில், மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் வழங்கினார்.
கடையம் ஒன்றியம், பொட்டல்புதூர் அருகேயுள்ள புதுநகர் திமுக கிளை செயலாளர் மாரியப்பன் என்பவரது ஒன்றரை வயது பேத்தி ஆதிரா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தாள்.
இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், அக்குழந்தையின் வீட்டிற்கு நேரில் சென்று, குழந்தையின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் மாவட்ட திமுக சார்பில் உதவித்தொகையாக ரூ.5 ஆயிரத்தை அவர் வழங்கினார்.
அப்போது கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார், நிர்வாகிகள் சசிகுமார், மோகன், ரவீந்திரன், சக்திசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.