Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
இராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழும முன்னாள் தலைவர் பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜாவின் 88 வது பிறந்தநாள் விழா திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது.
இப்பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காலையில் பி.ஏ.சிஆர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜாவின் நினைவிடத்தில் நடைபெற்ற கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, அவரது மகன் பி.வி.அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா, குடும்பத்தினர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் நகரின் முக்கிய பிரமுகர்கள், ராம்கோ கல்வி, குழும அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த பாரதீ வேதபாட சாலையில் அமைந்துள்ள பி.ஆர் ராமசுப்பிரமணிய ராஜாவின் திருஉருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து நினைவு ஜோதி ஓட்டத்தை ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா துவக்கி வைத்தார்.
தொடர் ஜோதியானது சாரதாம்பாள் திருக்கோயில், ராம மந்திரம் வழியாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இராஜபாளையம் வந்தடைந்தது. பின்னர் அங்கே நினைவு ஜோதி ஸ்தாபனம் செய்யப்பட்டது.