![](admin/uploads/.631d6f987aeee0.00574112.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கி.வெங்கடாசலம் வரவேற்றார். அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் உதவி ஆணையரும், கல்லூரியின் செயலாளருமாகிய மு.இரமணிகாந்தன் தலைமை உரை ஆற்றினார்.
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் செ.தங்கமுத்து, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செ.ர.கார்த்திகேயன், பி.அர்ஜுனன், திருமதி.மோ.அருணா சங்கர், டி.சி.பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த துவக்க விழாவின் போது அறங்காவலர் குழு சார்பாக மூன்று மாணாக்கர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது, மேலும் புரவாளர்கள் கதிரேசன், நாகராஜன், முனைவர் நா.செந்தில்குமார் சார்பாக கல்லூரிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் வணிக நிர்வாகவியல் துறை உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் மோ.மெய்ஞானம் நன்றி கூறினார்.
இந்நிகழ்வை ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எ.திருமலை ராஜா மற்றும் முனைவர்.ப.சரவணன் தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்வில் அனைத்து துறை தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள், கலந்து கொண்டனர்.