![](admin/uploads/.61ee516df09cb2.61357003.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சி.எம்.ஆர்.எல். பணிகள் லைட்ஹவுஸ் பகுதியில் நடைபெறுவதால் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நாளை முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், சி.எம்.ஆர்.எல். பணிகள் லைட்ஹவுஸ் பகுதியில் நடந்து வருகின்றன. இதில் காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம், 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பயன்படுத்த இயலாது.
இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நாளை முதல் ஒரு வருடகாலத்திற்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
லூப் ரோடு, காமராஜர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் லைட்ஹவுசில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவு சின்னம் நோக்கி செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். போர் நினைவு சின்னத்தில் இருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக லைட் ஹவுஸ் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.
லைட்ஹவுசில் இருந்து பீச் சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன்பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக அவர்கள் யூ டர்ன் செய்து லைட்ஹவுஸ் வந்தடைந்து, வலது புறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம். போர் நினைவுச் சின்னத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள், காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம்.
அதன்பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அவர்கள் யூ டர்ன் செய்து இடதுபுறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம். இந்த மாற்றத்திற்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இந்தா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.