![](admin/uploads/.6135cdd2702a13.55444597.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
இதில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 211 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நுண்தொழில் நிறுவன நிதி திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு பல்வேறு தொழில் தொடங்குவதற்கான கடனுதவிகளை ரூ.6.2 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.