![](admin/uploads/.5eaffa4b4f0a11.14823530.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மின்வாரியத்தில் பணிப்புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அதனை தொடர்ந்து, மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களின் விவரங்கள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
இதன் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.