Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கம்

ஜுலை 06, 2023 08:54

இராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அடுத்துள்ள சத்திரப்பட்டி பகுதியில் இருந்து ஜமீன் நத்தம்பட்டி செல்லும் சாலையில், வாகைகுளம் கண்மாய் பகுதியில் தரைப்பாலம் உள்ளது.

இந்த தரைப்பாலத்தை மழை காலங்களில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு கடந்து சென்று வந்த நிலையில் தரைப் பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என இப்பகுதியில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து இந்த கோரிக்கையை ஏற்று சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ரகுராமன் முயற்சியினால் 3.50 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணிக்கு  பூமி பூஜை செய்து பணிகளை துவங்கி வைத்தார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் மதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் விநாயகமூர்த்தி, கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன், இராஜபாளையம் நகர செயலாளர் மதியழகன், திமுக கூட்டணி கட்சி, திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவண முருகன், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் இந்த மேம்பால பணிகள் ஆறு மாதத்தில் முடிக்கப்படும் என  ஒப்பந்ததாரர் தெரிவித்தார் என்றும், பின்னர் அவர் கூறுகையில் மேம்பாலமானது 52 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

 

தலைப்புச்செய்திகள்