Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 இலவச கண் பரிசோதனை, மருத்துவ முகாம் 

ஜுலை 08, 2023 04:09

வாசுதேவநல்லூர்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராயகிரி நாடார் உறவின் முறை காமராஜர் நர்சரி தொடக்க பள்ளியில் ராயகிரி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி பவுண்டேஷன் மற்றும் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில்  இலவச கண் பரிசோதனை, மருத்துவ முகாம் நடந்தது. 

இம்முகாமிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ராயகிரி கிளை மேலாளர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். 

மேலும் நாடார் உறவின் முறை பள்ளி கமிட்டி தலைவர் எஸ்.அம்மையப்பன் முன்னிலை வகித்தார். 

இதில் சிறப்பு அழைப்பாளராக பவுண்டேஷன் நிர்வாக அதிகாரி சௌந்தரபாண்டியன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். 

இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். 

மேலும் 30 நபர்கள்  அறுவை சிகிச்சைக்கு  திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு செல்ல தேர்வு செய்ய பட்டனர். கண் பரிசோதனை செய்து கொண்ட நபருக்கு  இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்