Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜுலை 13, 2023 02:46

குமாரபாளையம்: குமாரபாளையத்தில் சி.பி.ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மணிப்பூர் மாநில மக்களை பிளவு படுத்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வலியுறித்தியும் குமாரபாளையம் சி.பி.ஐ. சார்பில் நகர துணை செயலர் அசோகன்  தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன. 

இதில் வக்கீல் கார்த்திகேயன், நிர்வாகிகள் மனோகரன், கிருஷ்ணசாமி, கணேஷ்குமார், ஈஸ்வரன், சரசு, அம்சவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்