Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூலபள்ளிபட்டி ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் : கே.பி.இராமசுவாமி துவக்கி வைத்தார்

ஜுலை 13, 2023 02:59

நாமக்கல்: கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிங்களவை உறுப்பினருமான K.R.N.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் அறிவுறுத்தல் படி, நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான KP இராமசுவாமி தலைமையில் மூலபள்ளிபட்டி ஊராட்சி கோரையாறு பகுதியில் 15 வது நிதியிலிருந்து ரூ. 12.86 லட்சம் மதிப்பீட்டில் பைப் லைன்  கழிவு நீர் வாய்க்கால் மற்றும் 11 வீதிகளுக்கு கவர் சிலாப் அமைத்தல் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனியப்பன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகன், குப்புசாமி, ருக்மணி, Ex.paccs தலைவர் P.பழனிச்சாமி, தொ.வே.கூ.சங்க தலைவர் K.இளையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கிளைசெயலாளர்கள் செல்வராஜ், காளியப்பன், ஜெயவேல், ரவிகுமார், நாச்சிகவுண்டர், ஜெய்சங்கர், முத்துசாமி, சுப்பிரமணி, அய்யாவு, நடேசன் பெரியசாமி மல்லிகா, செல்லம்மா மற்றும் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்