![](admin/uploads/.5f06e223264d51.88877467.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் மற்றும் எருமப்பட்டி பேரூர்களில் கடந்த மார்ச் 2021 முதல் தற்பொழுது வரை மறைந்த 250 கழக உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதனை தொடர்ந்து தலா ரூ.5000 வீதம் ரூ.12,50,000 முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் குடும்ப நல நிதியினை சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி முன்னிலையில், எருமப்பட்டி ஒன்றிய கழக செயலாளரும், அட்மா கமிட்டி தலைவருமான பாலு (எ) P.பாலசுப்ரமணியன், எருமப்பட்டி பேரூர் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான சி.பழனியாண்டி தலைமையில் நடைபெற்றது.
இதில்,நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலைஞர் குடும்ப நல நிதியினை வழங்கினார்.
இந்நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பவித்திரம் கண்ணன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சி.ஆனந்தகுமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலைவாணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துகருப்பன், முத்துகிருஷ்ணன், மகாமுனி, விமல், பாலு, நேரு, சுரேஷ், நாகராஜ், தங்கராசு, செந்தில், ராஜலிங்கம், மற்றும் கிளை கழக செயலாளர், நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.