![](admin/uploads/.5e9ee5ef061d72.71635427.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பாவூர்சத்திரம்: குணராமநல்லூர் ஊராட்சியில் ரூ.24 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், குணராமநல்லூர் ஊராட்சி அருந்ததியர்காலனியில், ஆதி திராவிட நலத்துறை சார்பில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ.காவேரிசீனித்துரை தலைமை வகித்தார்.
இதில் துணை சேர்மன் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இரா.சாக்ரடீஸ்,யூனியன் கவுன்சிலர் ஜான்சி ஜெயமலர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுபா சக்தி வரவேற்றார்.
இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று, பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, திமுக நிர்வாகிகள் மாரிமுத்து, நீலகண்டன், காசிமணி, பேச்சிபாண்டி, பொன்னையா,கருப்பசாமி, அன்பு, முருகேசன், தளபதி விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், தொண்டரணி துணை அமைப்பாளர் பொன்மோகன், ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ், அரசு ஒப்பந்ததாரர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.