Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம்

ஜுலை 14, 2023 08:03

பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ரூ.2.32 கோடியில் திட்டப்பணிகளை மேற்கொள்ளதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் தலைமையில், மன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. 

இதில் செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைத்தலைவர் கி.ராஜசேகர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் வி.ராதா விநாயகப் பெருமாள், செ.கோடிஸ்வரன், மு.மாலதி முருகேசன், கு.ஜெயசித்ரா, குத்தாலிங்கம், மு.கனக பொன்சேகாமுருகன், க.இசக்கிராஜ், சி.அன்பழகுசின்னராஜா, ஜா.ஜேஸ்மின் யோவான், மா.இசக்கிமுத்து, சு.பவானிஇலக்குமண தங்கம், த.வெண்ணிலா தங்கச்சாமி, ம.சாமுவேல்துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் இக்கூட்டத்தில் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மதிப்பூதியத்தொகையினை உயர்த்தி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தும் மற்றும் ரூ.2 கோடியே 32 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் குடிநீர் திட்டம், பொது சுகாதார பராமரிப்பு, சாலை வசதிகள் போன்ற பணிகள் மேற்கொள்வதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்