Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
பள்ளிபாளையம்: மதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் தமிழக ஆளுநர் ரவியை மத்திய அரசு திரும்ப பெற கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ துவக்கி வைத்த நிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பள்ளிபாளையம் நகர மதிமுக சார்பில் தமிழக ஆளுநர் ரவியை திரும்ப பெறக் கோரி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மேலும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு மதிமுக பள்ளிபாளையம் நகர செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். தீக்குளி செழியன் வரவேற்புரை ஆற்றினார். முதல் கையெழுத்து நிகழ்வை பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகர் மன்ற துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட மதிமுக செயலாளர் கே.கே.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்வில் அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், விவசாய அணி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.