Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீருடை பணியாளர் தேர்வுக்கான விளையாட்டு பயிற்சி மைதானம் திறப்பு விழா

ஜுலை 16, 2023 08:31

பாவூர்சத்திரம்: தோரணமலை முருகன் கோயில் வளாகத்தில் சீருடை பணியாளர் தேர்வு பயிற்சிக்கான விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது.

தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயில் வளாகத்தில், கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறை, ராணுவம், தீயணைப்பு துறை, ரெயில்வே, காவல்துறை போன்ற  சீருடை பணியாளர் தேர்வுக்கான உடல் திறன் தேர்வுகளில் தேர்ச்சி  பெறும் வகையில், இதற்கான விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. 

இதை ஆவுடையானூர் எலும்பு மூட்டு சிறப்பு மருத்துவர் தர்மராஜ் திறந்து வைத்தார்.

இதில் சுற்று வட்டார கிராமப்புற  மாணவர்கள் பயன்பெறும் வகையில்,  இம்மைதானத்தில் உடல் திறனை மேம்படுத்து வகையில், நீளம் தாண்டுதல் மற்றும் கயிறு ஏறும் பயிற்சி பெறுவதற்கான வசதிகள் உள்ளது.  கிராமபுற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இம்மைதானத்தை அமைத்துக் கொடுத்த கோயில் நிர்வாகத்தை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

தலைப்புச்செய்திகள்