Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவுடையானூர் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ஜுலை 16, 2023 08:43

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப் பட்டது.

பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் மோயீசன் அடிகளார் தலைமை வகித்தார். மருத்துவர் ஜான்சன் செல்லையா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அந்தோணி அருள்பிரதீப் வரவேற்றார்.

பின்னர் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, மாறுவேடப் போட்டியும், 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டியும், 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு கவிதைப் போட்டி, ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டது. 

இதில் காமராஜர் புகழ் போற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் (எ) கோபி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

முன்னதாக, நடைபெற்ற நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் விழாவில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆன்டனி அமிர்தராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் எஸ்.கே.டி.பி காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பள்ளியின் தமிழ்த்துறை ஆசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தலைப்புச்செய்திகள்