Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வேலகவுண்டம்பட்டி, கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

ஜுலை 21, 2023 11:24

நாமக்கல்: வேலகவுண்டம்பட்டி, கொங்குநாடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராசர் தினம், பள்ளி மாணவத் தலைவன், அணித் தலைவன் பதவியேற்பு, ஆங்கில நாடகத் திருவிழா என முப்பெரும் விழா கொண்டாட்டப்பட்டது.

தேசத் தலைவர்களின் சமூகப் பங்களிப்பை உணரும் வகையிலும் தலைவர்களின் கொள்கைகளைப் பின்பற்றும் வகையிலும்,  மாணவர்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் திறன்களின் மேம்பாட்டை உணரும் வகையிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ்விழாவில் காமராசர் கல்விக்கு ஆற்றிய தொண்டு பற்றியும் அரசியல் பங்களிப்பு பற்றியும் மாணவர்கள் உரையாற்றினர். பின்பு அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து பள்ளி மாணவத்தலைவன் மற்றும் அணித் தலைவர்கள் பதவியேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற கர்னல் அந்தோணி பாட்ரிக் கலந்து கொண்டு நாட்டுப் பற்றினைப் பற்றியும், இராணுவத்தில் மாணவர்களின் ஈடுபாடு பற்றியும் உரையாற்றினார். தொடர்ந்து அணி வாரியான ஆங்கில நாடகங்கள் நடைபெற்றது. 

இவ்விழாவில் நிறுவனத்தின் தாளாளர் ராஜன் பள்ளியின் ஆலோசகர் ராஜேந்திரன். தலைவர் ராஜா. செயலாளர் சிங்காரவேலு, நிர்வாகி ராஜராஜன், முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்