![](admin/uploads/.60d7ffbf3ead96.63294725.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் மீதான கொடுர பாலியல் தாக்குதலை கண்டிக்காத மத்திய மற்றும் அம்மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் கலவரத்தில் மாதக் கணக்கில் பெண்கள் மீது கொடுர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண்கள் அங்கு நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை இதுவரை கண்டிக்காமல் இருக்கும் மத்திய மற்றும் அம்மாநில பா.ஜ.க. அரசை கண்டித்து போராட்டம்.
இதில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் வரும் 24.07.2023 திங்கட்கிழமை அன்று நாமக்கல் கிழக்கு மாவட்டம் மோகனூர் சாலையில் காலை 10.00 மணி அளவில் மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ப.ராணி தலைமையில் இராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.ஜோதிலட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் வெ.கௌரி ஆகியோர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அறிவித்துள்ளார்.
இம்மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணி மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்(மகளிர்), வார்டு மற்றும் கிளை கழக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், கழக மகளிர் தொண்டர்கள் மற்றும் அனைத்து மகளிர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.