Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்  மாவட்ட ஆட்சிர் ச.உமா ஆய்வு

ஜுலை 26, 2023 11:34

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், வடுகம் முனியப்பம்பாளையம் ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் மையத்தினையும், தொப்பம்பட்டி ஊராட்சியில் பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் தலா ரூ.10.00 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள  குழந்தைகள் மையத்தினையும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர், தொப்பம்பட்டியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாமில் ஆய்வு மேற்கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்யப்படும் பொழுது ஆவணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தி, கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 15 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார். 

இந்நிகழ்வுகளின் போது, உதவி இயக்குநர் (வேளாண்மை) உமா, வட்டாட்சியர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பாலமுருகன், அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்