Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச எறிபந்து போட்டி, பயிற்சி முகாம்

ஜுலை 28, 2023 11:34

திருச்செங்கோடு: திருச்செங்கோடு K.S.R. தொழில்நுட்ப கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச எறிபந்து போட்டி பயிற்சி முகாம் நடந்தது. இதில் தமிழ்நாடு ஜார்கண்ட் தெலுங்கானா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 12 ஆண்கள் 12 பெண்கள் என 24 பேர் பயிற்சி பெற்றனர்.

மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் தமிழகத்தில் நடக்க உள்ள சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான எறிபந்து போட்டிகளில் பயிற்சி பெற்றுதிறனை மேம்படுத்த மலேசியா கோலாலம்பூரில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் பயிற்சி முகாமிற்கு 24 பேரும் செல்ல உள்ள நிலையில் மலேசியா செல்பவர்களை வழியனுப்பும் விழாவும் நடந்தது. 

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை கல்லூரியின் துணை முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். முகாம் குறித்த அறிக்கையை இந்திய பாரா த்ரோபால் ஃபெடரேஷன் தலைவர் ஆல்பர்ட் பிரேம்குமார் வாசித்தார். மாவட்ட ஊராட்சி குழு ஒன்றாவது வார்டு உறுப்பினர் பூபதி ராஜா, நாமக்கல் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குனர் முத்து கண்ணன் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டுத்துறை இயக்குனர்கள் கஜேந்திரன் தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்