Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைப்பதை கைவிடகோரி சாலையில் பாலை ஊற்றி போராட்டம்

ஆகஸ்டு 07, 2023 10:58

நாமக்கல்: மோகனூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி, அரூர், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதையொட்டி வளையப்பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் தொழிற்பேட்டைக்கான நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சிப்காட் அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே உண்ணாவிரதம், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், மனிதசங்கிலி, நெற்றியில் நாமம் போட்டும், அக்னி சட்டி ஏந்தி‌ உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கைவிடக்கோரி வளையப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் சாலையில் பாலை ஊற்றி  போராட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். இதில் சிப்காட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ராம்குமார், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், விவசாய அணி அமைப்பாளர் பரமசிவம் மற்றும் அதிமுக, பாஜக, தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்