Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முத்தாயம்மாள் கலை கல்லூரியுடன் பிரணவ் சொல்யூசன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஆகஸ்டு 10, 2023 01:07

ராசிபுரம்: ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
இயற்பியல் துறையானது, கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ‘பிரணவ் சொல்யூசன்’
நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்நிகழ்ச்சியானது கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ‘பிரணவ் சொல்யூசன்’ நிறுவனத்தின் சார்பாக அந்நிறுவன மேலாண்மை இயக்குநர் பொறியாளர் ஆர்.இளவரசன், கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.விஜியகுமார்,  இயற்பியல் துறையின் துறைத்தலைவர் முனைவர் எம்.ரேவதி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும் கல்லூரயின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறை புலமுதன்மையர் முனைவர் எம்.சுதாகர் மற்றும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக கல்லூரி மாணாக்கர்களுக்கு இன்டர்ன்ஷிப் பணிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

தலைப்புச்செய்திகள்