![](admin/uploads/.64d9c29a187922.66618715.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் நகராட்சி சேலம் சாலையில் உள்ள சவுண்டம்மன் கோவில் வளைவில், குடிநீர் குழாய் பழுது ஏற்பட்டு, பள்ளம் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் பணி முடிந்து பள்ளத்தை வெறுமனே மண்ணை மட்டும் போட்டு மூடி விட்டு, அதன் மேல் பெரிய கல்லை வைத்து விட்டார்கள். இதனால் பல விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இது எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்கும்? நிரந்தரமாக அந்த பள்ளத்தை சரி செய்ய ஜல்லி, சிமெண்ட் கலவை போட்டு சமன் படுத்த வேண்டாமா? தனியார் யாராவது இவ்வாறு செய்து இருந்தால், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
ஆனால் நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டதால் யார் நடவடிக்கை எடுப்பது? என பொதுநல ஆர்வலர்கள் கேட்டு வருகின்றனர்.