Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுதந்திர தினத்தன்று ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளுக்கு ‘லீவ்’

ஆகஸ்டு 14, 2023 10:56

நாமக்கல்: சுதந்திர தினமான வருகிற 15 ஆம் தேதி, ‘டாஸ்மாக்’ மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட வேண்டும் என, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, நாமக்கல் மாவட்டத்தில், வருகிற 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘டாஸ்மாக்’ மதுபானக்கடைகள் மற்றும் அனைத்து பார்களையும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

15ம் தேதியன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், பார்கள் மற்றும் மது விற்பனை வளாகங்கள் அனைத்தையும் மூடி வைக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறி மதுக்கடைகள் மற்றும் பார்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியர் ச.உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்