![](admin/uploads/.6295a91067ccd4.26568264.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: கழகதலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் K.R.N.இராஜேஸ்குமார் எம்.பி, வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் வலிகாட்டுதலின்படி ஜேடர்பாளையம் ஊராட்சியில் சாலை பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் K.P.இராமசுவாமி
சீராப்பள்ளி பேரூராட்சி துணை தலைவர் N.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் K.பொன்னுசாமி
ஜேடர்பாளையம் ஊராட்சியில் ரூ. 63 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் கான்கிரீட் சாலை கான்கிரீட் கழிவு நீர் கால்வாய் போன்ற பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்
R.ஜோதிலட்சுமி ரவிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் உமா பன்னீர்செல்வம், துணைதலைவர் K.இளையப்பன், கான்ராக்டர் ராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் E.பிரபு, கிளை செயலாளர்கள் சுப்பிரமணி பழனிச்சாமி காசி தோழமை கட்சி நிர்வாகிகள் சுந்தரம் சிவராஜ் விமல் உழவன் நண்பன் கேசவன் நா.பேட்டை பாபு மற்றும் கழக நிர்வாகிகள் மூத்த முன்னோடிகள் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.