Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீ விபத்தால் பாதிக்கபட்ட குடும்பத்தினர்களுக்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் வழங்கினார்

ஆகஸ்டு 14, 2023 11:31

குமாரபாளையம்: நாமக்கல் மேற்கு மாவட்டம் ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண் 2 சின்னா கவுண்டம்பாளையம் பகுதியில்  இரவு 4 மற்றும் 5 வீதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு அருகில் இருந்த வீட்டில் சிலிண்டர் வெடித்து பொன்னுசாமி, ஜெகதீசன், சின்னமுத்து , தேன்மொழி, ராஜவேல்  மற்றும் லட்சுமணன் ஆகியோரின் ஆறு வீடுகள்  சேதமடைந்தது. 

மேலும் சேதம் அடைந்த பகுதிகளுக்கு நாமக்கல்  மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் உடனடியாக சம்பவ இடத்திற்கு பார்வையிட்டார். பின்னர், பாதிக்கப்பட்டடு 6 குடும்பங்களுக்கு ரூ5000/- நிவாரன தொகை, அரிசி மற்றும் வேட்டி, புடவை ஆகியவை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

இந்நிகழ்வில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.ஏ.இளங்கோவன், பேரூர் கழக செயலளார் திரு.எஸ்.பி.கார்திராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எம்.வெங்கடாசலம், பேரூராட்சி தலைவர் திருமதி.பா.சகுந்தலா, கவுன்சிலர் மோகனப்பிரியா குணசேகரன், பேரூர் வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்