![](admin/uploads/.5e218c71882744.51418265.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் ஆலாம்பட்டி மதுரைவீரன் கோவில், நாடார் தெரு பகுதியில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்பு அருகே பழமை வாய்ந்த புளியமரம் உள்ளது.
இந்நிலையில், இரவில் வீசிய கடும் சூறைக்காற்றுக்கு புளிய மரத்தின் கிளைகள் குடியிருப்பு பகுதியில் உள்ள பூபதி என்பவரின் ஓட்டு வீட்டின் கழிவறை மற்றும் பொன்னுசாமி என்பவரின் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் மீது விழுந்ததில் வீடுகள் சேதமானது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகளிடம், மரத்தை அகற்ற பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனக்கூறி இதற்கு நஷ்டஈடாக பாதிக்கப்பட்டோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டனர்.
ஆனால், அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் மட்டும் தறுவதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வெண்ணந்தூர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது.