Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: 77 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறகுகள் அறக்கட்டளை சார்பில் 4 ஆம் ஆண்டு குருதி கொடை விழா நடைபெற்றது.
அரசு மருத்துவர் எஸ்.தயாசங்கர், வட்டார மருத்துவ அலுவலர்,
மற்றும் ஐ சி டி சி ஆலோசகர் A.அன்புச்செல்வி, இராசிபுரம் ரத்த வங்கி மையம், ராசிபுரம் மருத்துவ அலுவலர், மற்றும் பணியாளர்கள் என அனைவரும் இணைந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறகுகள் அறக்கட்டளை பொது மக்களிடமிருந்து 71 யூனிட் குருதி கொடை பெற்றனர் .
இந்த நிகழ்வில் நாமகிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 23 வது முறையாக ரத்ததானம் வழங்கினார்.
இரத்ததானத்தை சிறப்பாக நடத்தியமைக்காக சிறகுகள் அறக்கட்டளைக்கு நற்சான்று வழங்கப்பட்டது.