![](admin/uploads/.60606b0455c2a1.07297477.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மின்மாற்றியை மாற்ற மக்கள் நீதி மய்யம் மனு
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் மின்மாற்றியை மாற்ற சொல்லி
மக்கள் நீதி மய்யம் மனு சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இதில் குமாரபாளையத்தில் மின்மாற்றியை மாற்ற சொல்லி
மக்கள் நீதி மய்யம் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் அய்யாத்துரையிடம் மனு கொடுக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:
மேலும் குமாரபாளையம் நகராட்சி 17வது வார்டு சேலம் மெயின் ரோடு, முருகன் இரும்புக்கடை பின்புறம் முருகன் கோவில் எதிரில், டிரான்ஸ்பார்மர் சாக்கடைக்குள் பதிந்துள்ளது.
அதனை தொடர்ந்து பழுதடைந்த டிரான்ஸ்மார்மர் அருகில் வீடுகள் மற்றும் கடைகள் இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நடக்காதிருக்க உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களின் நலன் கருதி டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் நீதி மய்யம் மகளிரணி செயலர் சித்ரா தலைமையில், நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.