Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் தேசிய தாய்ப்பால் வார விழா

ஆகஸ்டு 25, 2023 12:00

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறையினரால்  தேசிய தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது.  

விழாவில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டில் துறை தலைவர் முனைவர் R.சுஜாதா வரவேற்புரையா ற்றினார். கல்லூரி முதல்வர் மு.கோவிந்தராஜு தலைமையேற்று துவக்கி வைத்தார்.  குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பி.அலங்கம்மாள் தாய்ப்பாலின் சிறப்பினையும் நுட்பத்தினையும் மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினார். 

பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டு முதுநிலை மாணவிகளால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் விற்பனைக்கு செய்யப்பட்டது. இதில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்