Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மத்திய அரசின் பணிகள் நிலைக்குழுவினர் ஆய்வு கனிமொழி கருணாநிதி, ஏ.கே.பி‌.சின்ராஜ் பங்கேற்பு

ஆகஸ்டு 28, 2023 11:38

நாமக்கல்: மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் நிலைக்குழு உறுப்பினர்கள் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஊரக வளர்ச்சி துறையின் நிலைக்குழு தலைவர் கனிமொழி கருணாநிதி தலைமையில் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர்  A.K.P.சின்ராஜ் கலந்து கொண்டார்.

இந்த ஆய்வில் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் மேற்கூரையிலிருந்து மழைநீர் சேகரிக்கும் நிலையத்தைத் திறந்து வைத்தும், பசுமைக்குடில் தோட்டங்களையும் பார்வையிட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்