![](admin/uploads/.624d329b493cc4.37671538.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் பணியாற்றி வரும் சிறப்பாசிரியர்கள் தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், அம்பை, ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், களக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்ற நிலையில், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக முதல்வருக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, தமிழக அரசானது கொள்கை முடிவு எடுத்து பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.