Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம் இளைஞரணி மாநாட்டிற்கு ரூ.1 லட்சம் இராஜேஸ்குமார் எம்.பி யிடம் ராணா ஆனந்த் வழங்கினார்

செப்டம்பர் 10, 2023 08:23

 நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் தெற்கு நகர செயல் வீரர் கூட்டம் தெற்கு நகர திமுக செயலாளர் ராணா ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 

மாவட்ட திமுக அவை தலைவர் சி.மணிமாறன், நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான K.R.N. இராஜேஸ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
கூட்டத்தில் வருகிற டிசம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில இளைஞர் அணி மாநாட்டு நிதியாக நகர கழகம் சார்பில் ரூ.1 லட்சம் நிதியை நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரிடம் தெற்கு நகர செயலாளர் ராணா ஆர்.ஆனந்த் வழங்கினார்.

கூட்டத்தில்  மாவட்ட, நகர திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நகர துணை செயலாளர்கள் புவனேஸ்வரன், குட்டி  செல்வகுமார். சரோஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கடல்அரசன் கார்த்தி, நகர இளைஞர் அணி சதிஸ், ராஜேஸ், மன்னன், மணி, அர்ஜூன் மற்றும் நகர, வார்டு கழக உடன் பிறப்புகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்