![](admin/uploads/.5dd90304bc1a11.61499604.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நிதித்துறை அரசு முதன்மை செயலாளர் உதயசந்திரன் தாயார் லீலாவதி தங்கராஜ் அவர்கள் உடல்நல குறைவால் சேலம் மாவட்டம் காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அன்னாரது திருவுருவப்படத்திற்கு நாமக்கல்லில் உள்ள அவர்களது இல்லத்தில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் தியாகராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வின் போது வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா ஆகியோர் உடன் இருந்தனர்.