Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவிரி குடிநீர் தினசரி வழங்க மல்லசமுத்திரம் பொதுமக்கள் கோரிக்கை  

அக்டோபர் 20, 2023 05:52

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் பேரூராட்சி  அம்மாபட்டியில் 1 வது வார்டு பகுதியில் காவிரி குடிநீர் தினசரி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் மக்கள் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு காவிரி குடிநீர் 15 நாளுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் குடிநீர் வருவதால் தினசரி குடிப்பதற்கு போதிய குடிநீர் இல்லாதால் பெரும் சிரமத்தை  சந்திப்பதுடன் குடிநீரை  விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தினமும் காவிரி குடிநீர் வழங்க வேண்டும். போதிய குடிநீர் வசதி ஏற்படுத்த தர  பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்