![](admin/uploads/.612db59d55cb96.21435689.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம், காவிரி கரையோர பகுதியில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்கும் இடங்களை ஆட்சியர் பார்வையிட்டார்.
குமாரபாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும் சமயங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்களை நகராட்சி பள்ளி மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைப்பது வழக்கம்.
இந்த இடங்களில் போதிய இட வசதி, மின்சார வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் உள்ளனவா? என மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று, தகுதி உள்ள நபரா? என விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, தாசில்தார் சண்முகவேல் வி.ஏ.ஒ. முருகன், மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, புத்தர் தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.