![](admin/uploads/.5d56b67612ac15.99639883.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் புதிய பவர் லாண்டரி மெஷின் துவக்க விழா நடைபெற்றது.
நாமக்கல் லோக்சபா எம்.பி. சின்ராஜ், தனது, பார்லிமென்ட் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கான போர்வைகள் மற்றும் துணிமணிகள் துவைப்பதற்காக ரூ. 8,38,980 மதிப்பீட்டில் புதிய துணி துவைக்கும் இயந்திரம் (பவர் லாண்டரி) வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதையொட்டி புதிய இயந்திரம் வாங்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய பவர் லாண்டரி மெஷின் துவக்கவிழா, சின்ராஜ் எம். பி. தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு சட்ட மன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் கலந்து கொண்டு புதிய பவர் லாண்டரி இயந்திரத்தை, மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில விவசாய அணி இணை செயலாளர் சந்திரசேகர், தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், சேந்தமங்கலம் பேரூர் திமுக செயலாளர் தனபால் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.