![](admin/uploads/.5ea96245597063.29825984.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையம் சர்ச் இல் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.
நாமக்கல் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜாநகர் புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பிரார்த்தனையில் கலந்து கொண்ட சிறுபான்மை மக்கள் மத்தியில் நடைபெற்றது.
நகராட்சி தலைவர் மற்றும் வடக்கு நகர தி.மு.க. செயலாளர் விஜய் கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சிறுபான்மை நல பிரிவு அமைப்பாளர் சேக் தாவூத் பங்கேற்று பேசினார்.
துணை அமைப்பாளர்கள் ஜூல்பிகார் அலி, ஜான் பீட்டர், நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ், தெற்கு நகர திமுக செயலாளர் ஞானசேகரன்
தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பங்கு தந்தை மற்றும் பேரவை உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் திமுக மாவட்ட மற்றும் நகர கழக நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.