![](admin/uploads/.66583027dd4b61.92364437.jpg)
Sunday, 30th June 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ரெயில் பயணிகளிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த சாகுல் ஹமீது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 110 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ரெயில்களில் 4 ஆண்டுகளாக திருடிய சாகுல் ஹமீது, அந்த பணத்தை கொண்டு மலேசியாவில் ஓட்டல் ஒன்றும் வாங்கியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரெயில் பயணிகள் தங்கள் எடுத்துச்செல்லும் பொருட்களை கவனமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று ரெயில்வே டிஐஜி பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.