![](admin/uploads/.5ff5b2773560b3.78848280.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதி தேசிய ஒற்றுமை தினமான கொண்டாடப் படுகிறது.
அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழியினை
அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.
சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன்.
எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் என அனைத்துறை அலுவலர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) த.மாதவன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி, தாட்கோ பொது மேலாளர் பா.ராமசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.