Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

நவம்பர் 03, 2023 04:41

பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கந்தசாமிக் கண்டர் கல்லூரியில்  தேசிய மாணவர் படையின் சார்பாக  (விமானப் படை) ''  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை  பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கல்லூரியில் இருந்து வேலூர் கடைவீதி வழியாக பேருந்து நிலையம் வழியாக  நல்லியாம்பாளையம் புதூர் வழியாக மாணவர்கள் ஊர்வலமாக கையில் பதாகை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  

கல்லூரி முதல்வர் முனைவர் லோகநாதன் முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் மற்றும்  தேசிய மாணவர் படை அதிகாரி (விமானப்படை) பிளையிங் ஆபிசர் முனைவர் மு.சிவக்குமார் . லெப்டினன்ட் த.வெண்ணிலா முனைவர் மு.கிருஷ்ணராஜ் ஆங்கிலத் துறையின் தலைவர் மற்றும் முனைவர் கு.சரவணன்  பொருளியல்  துறை தலைவர் (பொ) மற்றும் பேராசிரிய பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்