![](admin/uploads/.5daeb5ed11c355.82511487.jpg)
Monday, 1st July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ராசிபுரம்: தமிழக செய்தித் துறையின் முன்னாள் கூடுதல் இயக்குனர் எஸ் பி எழிலழகன் தந்தை பழனிசாமியின் மறைவையடுத்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
செய்தித்துறை முன்னாள் கூடுதல் இயக்குனர் எஸ்.பி. எழிலழகன் . அவரது சொந்த ஊர் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் அத்தனூர் பகுதியில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு எளியழகன் தந்தை பழனிசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
நேற்று அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.பி.தாமோதரன், வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.ராஜா, ஆர்.பிரகாசம், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஈ.கே.பொன்னுசாமி, மகளிர் அணி வழக்கறிஞர் ராதா, மற்றும் கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலர் உடன் இருந்தனர்.