Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் நடந்த கமல் பிறந்த நாள் விழாவில் டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமலஹாசனின் பிறந்த நாளையொட்டி குமாரபாளையத்தில் கட்சி கொடியினை மாவட்ட செயலர் காமராஜ் ஏற்றி வைத்தார்.
மாவட்ட மகளிரணி நிர்வாகி சித்ரா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சேலம் டி.எஸ்.பி. சண்முகம் பங்கேற்று பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, மரம் நடுதலின் அவசியம் குறித்து பேசினார்.
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் நந்தகுமார், உஷா, விமலா, மல்லிகா உள்பட பலர் பங்கேற்றனர்.