![](admin/uploads/.6499a82972d526.75226082.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.11.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 பயனாளிகளுக்கு ரூ.14.42 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 360 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமாவிடம் பொதுமக்கள் வழங்கினர்.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு சுய தொழில் தொடங்க ரூ.9,71,650/- மதிப்பில் கடனுதவி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கூட்டுறவுத் துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டை என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.14.42 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.
மேலும், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பள்ளி / கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 16 மாணாக்கர்களுக்கு ரூ.48,000/- மதிப்பில் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.த.முத்துராமலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.