Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

4 சட்டசபை தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு

மே 18, 2019 05:38

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரமும் நேற்று மாலை 6 மணிக்கு முடிந்தது.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அரவக்குறிச்சியில் 8 இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்தார். பிற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. 7-வது இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும், மாலை 6 மணிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறும். அன்று மாலையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரியவந்து விடும்.

தலைப்புச்செய்திகள்