Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: 106-ஆண்டு நவம்பர் புரட்சி தின கொடியேற்று விழா திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர செயலாளர் சுகுமார் தலைமை வகித்தார். சிபிஐ திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் முனுசாமி முன்னிலையில் நடைபெற்றது.
கொடியேற்றி வைத்து மாவட்ட செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அன்புமணி சிறப்புரை ஆற்றினார்.
சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜெயராமன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தனசேகரன், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வு உரிமை இயக்க மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் ஜெயராமன், சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி,
சிபிஐ நகர குழு உறுப்பினர் முருகேசன் Ex.M.C., கட்டட சங்க மாவட்ட துணைச் செயலாளர் கோபிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். லோகநாதன் நன்றி கூறினார்.